Published : 19 Feb 2015 01:45 PM
Last Updated : 19 Feb 2015 01:45 PM

மிசோரத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம்

மிசோரம் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் முதன் முதலாக ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதார அதிகாரி பச்சாவு லால்மல்சாவ்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, "பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 4 பேரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக கொல்கத்தா அனுப்பியிருந்தோம். ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனையடுத்து அம்மாநில சுகாதார அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x