Published : 27 Feb 2015 10:27 AM
Last Updated : 27 Feb 2015 10:27 AM

ஆர்.கே.பச்சௌரியை கைது செய்ய தடை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள, பருவநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (ஐபிசிசி) தலைவர் ஆர்.கே.பச்சௌரியை மார்ச் 27-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. பச்சௌரியின் முன் ஜாமீன் மனு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க, அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பச்சௌரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா கூறும்போது, “விசாரணைக்கு பச்சௌரி ஒத்துழைப்பு அளிக்கிறார். அவரது உடல்நலம் கருதி அவரை கைதுசெய்யக் கூடாது” என்றார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி மார்ச் 27-ம் தேதி வரை பச்சௌரியை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்லவும் நீதிபதி தடை விதித்தார். டெல்லியில் உள்ள தி எனர்ஜி அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் 29 வயது பெண் ஆய்வாளர் ஒருவர் பச்சௌரி மீது போலீஸில் பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x