எல்லையில் 11 முறை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

எல்லையில் 11 முறை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 11 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எப் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 21 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையிலான மோதலில் 2 பிஎஸ்எப் வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 3 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த மாதத்தில் 11 முறை தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலும் இதுபோன்ற முயற்சி நடைபெறும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முறியடிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in