Published : 10 Feb 2015 11:31 AM
Last Updated : 10 Feb 2015 11:31 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மை வெற்றியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், தேர்தலில் பாஜக தோல்விக்கு தான் தார்மீக பொறுப்பேற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவரது வீட்டின் முன் கூடியிருந்த செய்தியாளர்களை கிரண் பேடி சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தேர்தல் களத்தில் எனக்கும், கேஜ்ரிவாலுக்கும் எதிரான போட்டியில் யாராவது ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்தவகையில் கேஜ்ரிவால் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், டெல்லி தேர்தல் முடிவுகளை வைத்து நரேந்திர மோடி ஆட்சியை கணிக்கக் கூடாது. தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த கட்சியும் பொறுப்பு ஆனால் அதேவேளையில் ஒரு கட்சி தோல்வியுற்றால் பிரதான வேட்பாளரே பொறுப்பாகமுடியும். எனவே, இத் தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என்றார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT