Published : 16 Feb 2015 09:53 AM
Last Updated : 16 Feb 2015 09:53 AM
1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் கோவா மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 1993-ம் ஆண்டில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார்.
தாவூதின் கூட்டாளி ஷாம் கிஷோர் கரிகாபட்டி என்று அழைக் கப்படும் கருந்தேள் என்பவருக்கு குண்டு வெடிப்பில் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
அவர் 8 வருடங்களாக கோவா மாநிலம் பனாஜி அருகே உள்ள சலிகாவ் கிராமத்தில் தலைமறை வாக வாழ்ந்து வந்துள்ளார். அங்கு வாடகை வீட்டில் தங்கியிருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் கண் காணிப்பாளர் கார்த்திக் காஷ்யவ் கூறியபோது, கைது செய்யப்பட்ட ஷாம் கிஷோர் கரிகாபட்டி விரைவில் மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT