Last Updated : 03 Feb, 2015 10:50 AM

 

Published : 03 Feb 2015 10:50 AM
Last Updated : 03 Feb 2015 10:50 AM

வட்டிக் குறைப்பு? ஆர்பிஐ இன்று அறிவிப்பு

பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் உள்ள நிலையில் கடனுக்கான வட்டியை கால் சதவீதம் (0.25) ரிசர்வ் வங்கி குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கடன் ஆய்வுக் கொள்கை செவ்வாய்க்கிழமை (பிப்.3) நடைபெறுகிறது. இதில் வட்டி குறைக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

கோல் இந்தியா நிறுவன பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 22,577 கோடி வருவாய் கிடைத்துள்ளதும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. உற்பத்தித் துறையில் தொடர்ந்து நிலவி வரும் தேக்க நிலையைப் போக்க ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்போதைய நிலை தொடர்வதையே ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் விரும்புவதாக சில அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x