Published : 07 Feb 2015 11:35 AM
Last Updated : 07 Feb 2015 11:35 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அம்மாநில மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என்று தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட மத்திய டெல்லியின் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அவர்களின் விருப்பம் என்னவோ அவை மட்டுமே நடக்கும்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அர்விந்தர் சிங் லவ்லி, கிரன் வாளியா ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT