Published : 12 Feb 2015 02:50 PM
Last Updated : 12 Feb 2015 02:50 PM
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூரூக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த 70 வயது பெண் ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி பலியானார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் அனிமேர்(70). இவர் ஜெய்ஸால்மரை சுற்றிப்பார்க்க வந்திருந்தார். நேற்று ஜோத்பூருக்கு வந்த அவருக்கு திடீர் உடல்நல்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பதும் தெரியவந்தது.
ஏற்கெனவே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது மறைவு குறித்து சுவிஸ் நாட்டுத் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோய்க்கு அம்மாநிலத்தில் 117 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT