Last Updated : 15 Feb, 2015 12:04 PM

 

Published : 15 Feb 2015 12:04 PM
Last Updated : 15 Feb 2015 12:04 PM

கேஜ்ரிவால் முதல்வர் ஆனதில் மகிழ்ச்சி: அண்ணா ஹசாரே பெருமிதம்

எனது தொண்டர்களில் ஒருவரான அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தி யில் அவர் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை அன்றே கேஜ்ரிவாலை தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தற்போது மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். எனது தொண்டர்களில் ஒருவர் டெல்லி முதல்வரானது மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாகவும் முன்மாதிரி மாநிலமாகவும் அவர் மாற்றிக் காட்டுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x