Published : 19 Feb 2015 02:24 PM
Last Updated : 19 Feb 2015 02:24 PM
இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் மோஷே யாலோன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
பெங்களூருவில் நடக்கும் “ஏரோ இந்தியா 2015” மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவர் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தார்.
அப்போது, பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுகுழுவின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள ஒத்துழைப்பு திருப்தி தருவதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT