Last Updated : 19 Feb, 2015 10:30 AM

 

Published : 19 Feb 2015 10:30 AM
Last Updated : 19 Feb 2015 10:30 AM

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க லோக்பால் அனுமதி தேவையா? - புதிய திட்டம் வகுக்கிறது மத்திய அரசு

ஊழல் அதிகாரிகளை சி.பி.ஐ. விசாரிப்பதற்கு, ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற ரீதியில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் புகார்களை விசாரிப் பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லோக்பால் மற்றும் லோகா யுக்தா சட்ட திருத்த மசோதா, 2014, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஊழல் புகார் களை விசாரிக்க நாடு முழுவது பல்வேறு மாநிலங்களில் லோகாயுக்தா ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய அளவில் லோக்பால் அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஊழல் புகார் களில் சிக்கும் அதிகாரிகளை சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுப் பதற்கு முன்பு, அவை லோக்பால் அமைப்பிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்கிற ரீதியில் ஏற்கெனவே அமலில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது.

ஆனால், "இவ்வாறு விசா ரணை அமைப்புகள் முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்குவது ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கவே பயன்படும்" என்று உச்ச நீதி மன்றம் கருத்து கூறி யிருந்தது.

ஆனால் மத்திய அரசோ, இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் பேசியபோது, "எந்த நிலையிலும் அரசு அலுவலர் களிடையே மத்திய அரசு வேறு

பாடு காட்டுவதில்லை. மாறாக, விசாரணையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவே நாங்கள் முயற்சிக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x