Published : 20 Feb 2015 09:37 AM
Last Updated : 20 Feb 2015 09:37 AM

கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி

‘கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. 6 மாதங்களில் மின் உற் பத்தி தொடங்கும்’ என அணுமின் நிலைய கூடுதல் தலைமைப் பொறியாளர் எஸ்.காளிராஜன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று தொடங்கிய 3 நாள் தொழில்நுட்பக் கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது அணு உலையால் ஏற்படும் பயன்கள் குறித்து மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இங்குள்ள 2-வது அணு உலையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 6 மாதங்களில் இந்த அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும். இதற்காக வெப்பநீர் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவுள்ளது’ என்றார் காளிராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x