Last Updated : 24 Feb, 2015 12:30 PM

 

Published : 24 Feb 2015 12:30 PM
Last Updated : 24 Feb 2015 12:30 PM

தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் நஸீர் காலமானார்

தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் உமர் அப்துல்லாவின் மாமாவுமான ஷேக் நஸீர்(84) உடல் நலக் குறைவால் காலமானார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு மருத்துவமனையில் ஷேக் நஸீர்(84) உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு நாட்களாக செயற்கை சுவாச குழாய் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

மறைந்த ஷேக் நஸீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரான முகமது அப்துல்லாவின் மருமகன் ஆவார். இவர் அந்தக் கட்சியின் பொது செயலாளர் பதவியை 3 ஆண்டுகள் வகித்துள்ளார்.

ஸ்ரீநகரின் சவூராப் பகுதியில் உள்ள அவரது குடும்ப முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் ஷேக் நஸீரில் உடல் புதைக்கப்படும் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x