Published : 13 Feb 2015 02:55 PM
Last Updated : 13 Feb 2015 02:55 PM
டெல்லி முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இன்னும் காய்ச்சல் சரியாகவில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆஆக கட்சி, "கடந்த நான்கு நாட்களாக கேஜ்ரிவால் காய்ச்சலில் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார். இன்னும் ஒருசில சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், கேஜ்ரிவால் உடல்நலத்தைக் குறித்தே அவரது நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும்" என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT