Published : 25 Feb 2015 10:20 AM
Last Updated : 25 Feb 2015 10:20 AM

நிலம் கையகப்படுத்தும் மசோதா ‘கருப்பு சட்டம்’: நிதிஷ் குமார்

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா ‘கருப்பு சட்டம்’ என்றும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் `கருப்பு சட்டம்’ ஆகும். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலன் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், அவரது செயல்பாடுகள் முற்றிலும் மாறாக உள்ளன.

இந்த புதிய சட்ட மசோதா விவசாயிகள் நலனுக்கு எதிரானதும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதும் ஆகும். கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் முக்கிய அம்சத்தையே உடைத்தெறியும் வகையில் இது அமைந்துள்ளது. இதை பிஹார் மாநிலத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அமல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x