Published : 11 Feb 2015 09:49 AM
Last Updated : 11 Feb 2015 09:49 AM
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த முறையும் பல கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், தங்கள் கணிப்பு களில் தவறிழைத்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி யில் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே 67 இடங்களைப் பிடித்து பெரும் பாண்மை வெற்றியை அடைந் துள்ளது. கருத்துக்கணிப்பு மேற் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறும் என்று கூறியிருந்தாலும், யாருமே இத்தகையதொரு 'சுனாமி' வெற்றியை எதிர்பார்த்திருக்க வில்லை.
தவிர, மோடி 'மந்திரம்' வெற்றி தரும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைத்திருந்ததற்கு மாறாக, அக்கட்சி மூன்று இடங் களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஒரு இடம் கூடப் பிடிக்கவில்லை.
தேர்தல் நாளான 7ம் தேதி, பல்வேறு கருத்துக்கணிப்பு நிறு வனங்கள் கணிப்புகளில் ஈடுபட்டன. அவை அனைத்தும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பாண்மை கிடைக் கும் என்று கூறியிருந்தன. எனினும், அவற்றில் ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும்தான், அக்கட்சி 50க்கு மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறியிருந்தது.
இந்தியா நியூஸ்-ஏக்சிஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 53 இடங்களையும், பா.ஜ.க. 17 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் பிடிக்கும் என்று கூறியிருந்தது.
நியூஸ் 24-டுடேஸ் சாணக்கியா நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 48 இடங்களையும், பா.ஜ.க. 22 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியிருந்தது. மேலும் அது காங்கிரஸ் கட்சி எந்த இடதி தையும் கைப்பற்றாது என்றும் கூறியிருந்தது.
இந்தியா டுடே-சிசெரோ நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 43 இடங்களையும், பா.ஜ.க. 29 இடங்களையும் பிடிக்கும் என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சி 5 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறியிருந்தது.
ஏ.பி.பி.-நீல்சன் நடத்திய கணிப்பில் ஆம் ஆத்மி 39 இடங்களையும், பா.ஜ.க. 28 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் பிடிக்கும் என்று கூறியிருந்தது. அதேபோல ஜீ.டி.வி.-சி வோட்டர் நடத்திய கணிப்பில் ஆம் ஆத்மி 31 முதல் 39 இடங்கள் வரையும், பா.ஜ.க., 27 முதல் 35 இடங்களை வரையும், காங்கிரஸ் 2 முதல் 4 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று கூறியிருந்தது. அவ்வாறே இந்தியா டி.வி. நடத்திய கணிப்பும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT