Published : 07 Feb 2015 11:30 AM
Last Updated : 07 Feb 2015 11:30 AM

காங்கிரஸில் கட்சித் தேர்தல் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை

காங்கிரஸில் கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மூத்த தலைவர்கள், காங்கிரஸ் மத்திய தேர்தல் பிரிவு தலைவர் முல்லபல்லி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்தினம் இந்த ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

காங்கிரஸில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நடைமுறைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறும். பின்னர் கட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும். இந்த ஆண்டு இறுதியில் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.

கடந்த 2010 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல், 2012 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரை நடைபெற்றுள்ள தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. இது, கட்சி பலவீனமடைந்திருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. எனவே, கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கட்சியை தேர்தல் தோல்விகளி லிருந்து மீட்டு, புத்துயிரூட்ட கட்சித் தேர்தல் உதவியாக இருக்கும் என ராகுல் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x