Published : 04 Feb 2015 11:41 AM
Last Updated : 04 Feb 2015 11:41 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில். “டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை திங்கள்கிழமை சோதித்து பார்த்தபோது, 4 இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குகள் பாஜக வுக்கு பதிவாகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதா என்ன?” என்று குறிப்பிட்டுள்ளார்.
கன்டோன்மென்ட் தொகுதியில் எந்த இடத் தில் இந்த சோதனை நடைபெற்றது என்பதை கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT