Published : 11 Feb 2015 04:35 PM
Last Updated : 11 Feb 2015 04:35 PM

மத்திய அமைச்சர்களை சந்தித்த காரணம்: ட்விட்டரில் அர்விந்த் கேஜ்ரிவால் விளக்கம்

டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவில் செயல்படவே முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "வெங்கய்ய நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் மத்திய அரசில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள். அவர்களை பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன்.

டெல்லி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

மத்திய அரசுடன் ஆரோக்கியமான உறவில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியை நாளை சந்திக்கவுள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x