Last Updated : 10 Feb, 2015 10:55 AM

 

Published : 10 Feb 2015 10:55 AM
Last Updated : 10 Feb 2015 10:55 AM

கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 12 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானா, குஜராத்தை தொடர்ந்து கர்நாடக மாநில‌த்தில் பன்றி காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவிவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதிக் கப்பட்டுள்ள 125 பேருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவ தாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி.காதர் தெரிவித் துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பன்றி காய்ச்சல் மிக வேகமாக பரவி,பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் 385 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக கர்நாடகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, தெலங்கானாவில் பன்றி காய்ச்சல் நோயின் பாதிப்பு கள் கடுமையாக இருக்கிறது. ஆந் திராவை தொடர்ந்து குஜராத்திலும் 70-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஆந்திரா, தெலங் கானா, குஜராத் சென்று திரும்பி யோர் பன்றி காய்ச்சலால் பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆந்திர எல்லையோர மாவட்டங்களான பீதர், ரெய்ச்சூர், காலபுரகி, பெல்லாரி, சிக் பள்ளாப்பூர், கோலார் ஆகிய இடங்க‌ளில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வருவோருக்கு ப‌ன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனை நடத்த படுகிறது.

தெலங்கானாவுக்கு சென்று திரும்பிய பீதர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் வட்டாட்சியர் பாபுராவ் கண்டே(52), சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த லதா (48) ஆகியோர் கடந்த வாரம் பன்றி காய்ச்சலுக்கு பலியாகினர்.

இதையடுத்து சிக்பள்ளாப்பூர் சித்ரதுர்கா, பீதர் ஆகிய இடங்களில் மேலும் 3 பேர் இறந்தனர்.

கடந்த 3 நாட்களில் பெங்களூருவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

தீவிர நடவடிக்கை

இது தொடர்பாக கர்நாடக சுகா தாரத்துறை அமைச்சர் யூ.டி.காதர் ‘தி இந்து'விடம் கூறிய தாவது, ‘‘அண்டை மாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானாவை ஒட்டி யுள்ள பகுதிகளில் மிக வேக மாக பரவுகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடி யாக மருத்துவமனையில் அனு மதிக்க அறிவுறுத்த‌ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தினமும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 125 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதிசெய்யப் பட்டுள்ளது. பெங்களூருவில் 50 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களில் கவனமாக இருப்பதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x