Published : 18 Feb 2015 10:48 AM
Last Updated : 18 Feb 2015 10:48 AM

டெல்லியில் பலிக்கட்டும் புதிய நம்பிக்கை

டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால்குறித்து, டி.எம். கிருஷ்ணா எழுதிய ‘மற்றுமொரு ஆட்சி அல்ல;

புதிய நம்பிக்கை’ கட்டுரை அருமை. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளர் அல்ல என்றாலும், மக்களின் அளவற்ற நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரது செயல்பாடு இருந்ததால் முதல்வர் பதவிக்கு அவர் வந்திருப்பதை, கட்டுரையாளர் நடுநிலையுடன் வரவேற்றிருக்கிறார்.

உண்மையில், மக்களிடம் மிகப் பெரும் நம்பிக்கையை அர்விந்த் கேஜ்ரிவால் வளர்த்திருக்கிறார். அதேபோல், அவர் நேர்மையான ஆட்சியை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அவரது கடமை.

- கிருஷ்ணகுமார்,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x