Published : 11 Feb 2015 12:54 PM
Last Updated : 11 Feb 2015 12:54 PM
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர் நேரில் ஆஜராக தேவையில்லை என்று விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரித்தது. இது தொடர்பான உத்தரவின்போது இந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக தேவையில்லை என்று தெரிவித்தது.
இதே வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் மனிஷ் சிசோதயா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் மார்ச் 17 தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT