Published : 05 Feb 2015 03:35 PM
Last Updated : 05 Feb 2015 03:35 PM
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து மோடி அரசின் செயல்பாட்டை கணிக்கக்கூடாது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள அமித் ஷா, டெல்லியில் பாஜக பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். கிரண் பேடி டெல்லி முதல்வராவார்.
அதேவேளையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து மோடி அரசின் செயல்பாட்டை கணிக்கக்கூடாது.
டெல்லி தேர்தல் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காகவே தவிர பிரதமரை தேர்வு செய்வதற்காக அல்ல. இத் தேர்தல் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டியே தவிர மோடி ஆட்சியின் செயல்பாட்டை கணிப்பதற்காக அல்ல" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (7-ம் தேதி) நடைபெறவுள்ளது. 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பல்வேறு கருத்து கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து மோடி அரசின் செயல்பாட்டை கணிக்கக்கூடாது என அமித் ஷா கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT