Published : 04 Feb 2015 09:52 AM
Last Updated : 04 Feb 2015 09:52 AM

மலிவு விலை மருந்து திட்டம்: மாநில அரசுகளிடையே ஆதரவு இல்லை

மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் ‘ஜன் அவ்ஷாதி' திட்டம் தற்போது மூடு விழா காணும் நிலையில் உள்ளது. இதற்கு மாநில அரசுகளிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மலிவு விலை மருந்தகங் களுக்கு பொதுத்துறை நிறுவனங் களிடமிருந்து மருந்துகள் பெற்று அவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை யும் பங்கேற்க அரசு அழைத்தது. ஆனால் மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய அவர்கள் சம்மதிக்கவில்லை.

"பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும் தயாரிக்க முடியாது. அவற்றில் பலவற்றை தனியார் நிறுவனங்கள்தான் தர முடியும். ஆனால் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் பல கடைகளில் பெரும்பாலான மருந்துகள் இல்லை" என்று சிறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் ஜெனரல் ஜக்தீப் சிங் கூறுகிறார்.

ஆனால் அரசு இந்தக் கருத்தை மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x