Last Updated : 19 Feb, 2015 12:51 PM

 

Published : 19 Feb 2015 12:51 PM
Last Updated : 19 Feb 2015 12:51 PM

லண்டனில் இருந்து சிரியா செல்லவிருந்த இளம்பெண் கைது

இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையததில் 1.5 வயது குழந்தையுடன் பயணித்த பெண் கைது செய்யப்பட்டார். இவர் அங்கிருந்து தீவிரவாத தொடர்போடு சிரியாவுக்கு புறப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவுக்கு செல்ல இருந்த தரீனா ஷகில் (25) லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மிர்ரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தரீனாவுக்கு அவரது விருப்பத்துக்கு மாறாக இரண்டாவது திருமணம் செய்ய தயார் செய்த நிலையில், அவர் லண்டனிலிருந்து சிரியாவில் உள்ள ரக்காவுக்கு செல்ல திட்டமிட்டதாகவும், அங்கிருந்து அவர் துருக்கி சென்று ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற தயாரானதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரீனாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவர்த்தை அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டது.

தரீனாவின் 1.5 வயது குழந்தைக்கு வளர்ப்பதற்கு உதவி அளிப்பதாகவும் லண்டன் நகர காவல்துறையினர் உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x