Last Updated : 04 Feb, 2015 02:49 PM

 

Published : 04 Feb 2015 02:49 PM
Last Updated : 04 Feb 2015 02:49 PM

உலகக்கோப்பை போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் பொறுமை காக்க வேண்டும்: வார்னர் அறிவுரை

சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் உலகக்கோப்பை போட்டிகளில் பொறுமையுடன் விளையாட வேண்டும் என்று டேவிட் வார்னர் அறிவுரை வழங்கியுள்ளார்.

முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் 95 ரன்களையும் பிறகு பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல் உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு ஆல்ரவுண்டராக அச்சுறுத்தலாகத் திகழ்வார் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

"கிளென் மேக்ஸ்வெல் ரன்களை சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அன்று இறுதிப் போட்டியில் இன்னமும் 9 ஓவர்களே உள்ள நிலையில் அப்படியொரு ஷாட்டை ஆடுவது தேவையற்றது. அதுவும், அந்த ஓவரில் ஏற்கெனவே 9 ரன்கள் எடுத்துவிட்டோம்.

இப்போது அவர் புரிந்து கொண்டிருப்பார், ஒரு ஓவரில் அதிக ரன்கள் வந்து விட்ட பிறகே பொறுமை கடைபிடிக்க வேண்டும் என்பதை. இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை தன் அணிப்பக்கம் மேக்ஸ்வெல் தனி நபராக திருப்புவதை பார்த்திருக்கிறோம், இப்போது ஒருநாள் போட்டிகளிலும் அவர் இதனைச் செய்வது மிகப்பெரிய பலம்.

ஆனால், ரன்கள் வந்து கொண்டிருக்கும் போது காத்திருப்பது அவசியம்.

அவர், 95 ரன்கள் எடுத்த போது தொடக்கத்தில் எப்படி ஆடினார் என்ற வீடியோ பதிவை பார்க்க வேண்டும். இரண்டு டிரைவ்களை ஆட முயன்று தோற்றவுடன் தயக்கம் அவரை பீடிக்கத் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு நன்றாக விளையாடி பிறகு 9 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தை அடிக்க நினைத்து ஆட்டமிழந்தார்.

இதிலிருந்து அவர் பாடம் கற்பார் என்று கருதுகிறேன்.”

இவ்வாறு வார்னர் ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x