Last Updated : 15 Feb, 2015 11:34 AM

 

Published : 15 Feb 2015 11:34 AM
Last Updated : 15 Feb 2015 11:34 AM

ரயில், விமான நிலையங்களில் புத்தக விற்பனை கடைகள்: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, “ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்க ஏதுவாக ரயில்வே, விமானப் போக்குவரத்து அமைச்சகங்களை தொடர்பு கொண்டு பேசவுள்ளோம்.

இந்த விற்பனை நிலையங்களில் அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கும். பிராந்திய மொழிகளில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட தேசிய புக் டிரஸ்ட் முன்வரவேண்டும். மக்களிடையே புத்தக வாசிப்பு பெருகிட நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கிளப்புகள் அமைக்கலாம்” என்றார். டெல்லியில் சர்வதேச புத்தக கண்காட்சி 1972-ல் தொடங்கியது. இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் மொத்தம் 30 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச புத்தக கண்காட்சியாக இது கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x