Published : 24 Feb 2015 10:20 AM
Last Updated : 24 Feb 2015 10:20 AM

தலைநகருக்காக விவசாய நிலத்தை அபகரிக்கக் கூடாது: எம்எல்ஏ ரோஜா வலியுறுத்தல்

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமைக்க தற்போது குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் நிலம் சேகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல விவசாயிகள் தாங்களாக முன் வந்து தலைநகருக்காக நிலத்தை அரசுக்கு வழங்கி வரு கின்றனர். சிலர் நிலங்களை தர விருப்பமில்லை என அதிகாரி களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 26 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இப்பகுதியில் ஊர்வலம் நடத்தினர்.

அப்போது சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதிய தலைநகர் குண்டூர், கிருஷ்ணா ஆகிய இரு மாவட்டங் களுக்கிடையே அமைவதை எதிர்க்கவில்லை. ஆனால் இப் பகுதி விவசாயிகளிடமிருந்து தலைநகருக்காக வலுக்கட்டாய மாக நிலங்களை அரசு அபகரிக்க கூடாது.அவர்களுக்கு பிழைக்க வேறு வழி இல்லாமல் போய் விடும். இவ்வாறு ரோஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x