Published : 16 Feb 2015 09:58 AM
Last Updated : 16 Feb 2015 09:58 AM
டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் இரண்டு இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். முகமது நபிகள் குறித்து கார்ட்டூன் வெளியிட்டதை கண்டித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் நேற்றுமுன்தினம் இஸ்லாம் மதம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கூட்டம் நடைபெற்ற கட்டிடத்தை குறிவைத்து மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அங்கிருந்து தப்பிய மர்ம நபர், யூத வழிபாட்டுத் தலத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். இதில் ஒரு யூதர் உயிரிழந்தார். 2 போலீஸார் காயமடைந்தனர். சந்தேகத்துக்குரிய மர்ம நபரை பின்தொடர்ந்த போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT