Last Updated : 08 Jan, 2015 10:14 AM

 

Published : 08 Jan 2015 10:14 AM
Last Updated : 08 Jan 2015 10:14 AM

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அமைதி திரும்பியது

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தவில்லை. ஆனாலும் இன்னமும் 8 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கி உள்ளனர்.

இதுகுறித்து கதுவா மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறும்போது, “செவ்வாய்க்கிழமை இரவு முதல் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனால் அமைதி நிலவுகிறது” என்றார்.

சம்பா மாவட்ட காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அனில் மகோத்ரா கூறும்போது, “எல்லையில் அமைதி நிலவுகிறது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து புதன்கிழமை தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை” என்றார்.

பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “எல்லையோர கிராமங்களிலிருந்து இதுவரை சுமார் 11 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்தனர். இவர்களில் 8,000 பேர் இன்னமும் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கி உள்ளனர்” என்றார்.

சம்பா, கதுவா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 எல்லையோர கிராமங்கள், இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். செவ்வாய்க்கிழமையும் இந்தத் தாக்குதல் தொடர்ந்த நிலையில் புதன்கிழமை குண்டு சத்தம் ஓய்ந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x