Published : 28 Jan 2015 01:05 PM
Last Updated : 28 Jan 2015 01:05 PM
தேசிய மாணவர் படையில் (என்சிசி) நான் இணைந்திருந்த நாட்கள் எனக்கு பல பாடங்களை கற்றுத்தந்தன என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசு தினத்தையொட்டி என்சிசி சார்பில் நடைபெறும் வருடாந்திர முகாம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
என்சிசி குடியரசு தின முகாம் மினி இந்தியா போன்றது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் அழகு, வலிமை. என்சிசியில் நானும் உறுப்பினராக இருந்ததால் எனது இளமைக் கால நினைவுகள் இப்போது மலர்கின்றன.
வாழ்க்கை வழிமுறைகள், தேசியப்பற்றை என்சிசி மூலமாக நான் கற்றுக்கொண்டேன். எனினும் டெல்லி முகாமுக்கு நான் எப்போதும் தேர்வானதில்லை என்பது சற்று வேதனையானதுதான். நான் படித்த பள்ளியிலிருந்து ஒரு மாணவன் டெல்லி முகாமுக்கு அப்போது தேர்வாகியது பள்ளியையே குதூகலப்படுத்தியது.
இந்த முகாமுக்கு தேர்வான மாணவர்களை நான் பாராட்டு கிறேன். நமது நாடு வேறுபாடு களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறது. இதுதான் நமது வலிமை, வளமை என்றார். இந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. மாணவிகளும் பங் கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT