Published : 03 Jan 2015 11:38 AM
Last Updated : 03 Jan 2015 11:38 AM

ஜிபிஎஸ் கருவிகளுடன் 10,000 ஆட்டோக்கள் டெல்லியில் அறிமுகம்

டெல்லியில் ஜிபிஎஸ் கருவிகளுடன் புதிதாக 10 ஆயிரம் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதில் அடிக்கடி நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி, பெண் ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “டெல்லியில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு அடிக்கடி ஆபத்து வரும் நிலை நிலவுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, புதிய ஆட்டோக்களுக்கு வழங்கப்படும் அனுமதியில் பெண் ஓட்டுநர்களும் இருந்தால் நல்லது என கருதப்படுகிறது. எனவே புதிய விண்ணப்பங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றனர்.

இவ்வாறு பெண்களுக்கு வழங்கப்படும் ஆட்டோக் களுக்கான அனுமதியை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வேறு பெயர்களுக்கு மாற்ற இயலாது என்றும், அதில் ஆட்டோக்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது 80,000 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x