Published : 06 Jan 2015 10:52 AM
Last Updated : 06 Jan 2015 10:52 AM
தெலங்கானா மாநில வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி தலைமையில் குடியிருப்பு வாரிய அதிகாரிகளுடன் ஹைதராபாத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவின் பேரில், ஏழைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 2 படுக்கை அறைகள், சமையல் அறை, நவீன கழிவறை போன்ற வசதிகளுடன் ரூ.4.6 லட்சம் செலவில் இலவசமாக வீடு கட்டி தரும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் வீடுகள் வீதம் வரும் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டி தரப்படும். இவ்வாறு அமைச்சர் இந்திர கிரண் ரெட்டிதெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT