Published : 22 Jan 2015 10:14 AM
Last Updated : 22 Jan 2015 10:14 AM

பாஜகவை வீழ்த்த முலாயம் சிங்கின் சகோதரர் யோசனை

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் சேர்ந்தால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வளர்வதைத் தடுக்கலாம் என முலாயம்சிங்கின் சகோதரரும், சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராம்கோபால் கூறியதாவது:

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்தால் வரவிருக்கும் 2017 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போன்ற மதவாத சக்திகளை ஓரம்கட்டி விடலாம். ஆனால், இதற்கு மாயாவதி ஒப்புக்கொள்ள மாட்டார்.

தம் கட்சியில் எப்போதும் தாம் ஒருவரே முன்னிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறவர் மாயாவதி. அவருக்கு சமூகத்தின் மீது எந்த அக்கறையும் கிடையாது. அக் கட்சியின் நிறுவனரான கன்ஷி ராம் சமாஜ்வாதி கட்சி யுடன் 1993-ல் இணைந்த பிறகுதான், அவரது கட்சி வளர்ச்சி பெற்றது.

கன்ஷி ராம் பகுஜன் சமாஜை வளர்ப்பதில் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார். மாயாவதி கட்சியைவிட தம் முடைய வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துபவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x