Published : 17 Jan 2015 10:24 AM
Last Updated : 17 Jan 2015 10:24 AM

குஜராத்தி மொழியில் திருக்குறள் பிரதமர் மோடி வெளியிட்டார்

செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம், அனைத்து இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்தது. அதன்படி, குஜராத்தி மொழியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிறந்து த‌மிழகத்தில் வசிக்கும் இந்தி மொழி பேராசிரியர் பி.சி.கோகிலா இதனை மொழிபெயர்த்துள்ளார்.

இதனை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "திருக்குறளில் எந்த ஓர் இனம், சாதி, நாடு, மதம் போன்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதனால்தான் இது உலகப் பொதுமறையாக விளங்குகிறது. அதற்காக நான் திருவள்ளு வருக்கு தலை வணங்குகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x