Published : 21 Jan 2015 09:59 AM
Last Updated : 21 Jan 2015 09:59 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ஹைதராபாதில் நேற்று கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி ஒருவர் 3 முறை மட்டுமே பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி பல்வேறு மாநிலங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நானும் பதவிவிலக போகிறேன். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் ஏப்ரலில் நடைபெறும் மார்க்சிஸ்ட் மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்போது கட்சியின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT