Published : 14 Jan 2015 02:39 PM
Last Updated : 14 Jan 2015 02:39 PM
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, வரும் 18-ம் தேதி இந்தியா வருகிறார்.
பதவியேற்ற பிறகு அவர் மேற் கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
சமரவீராவை இந்திய வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் தொலைபேசி யில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த சுஷ்மா, கூடிய விரை வில் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து எழுத்து மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அழைப்பு உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவுக்கு வருகை தரும் சமரவீரா, சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சு நடத்துவார். இலங்கையில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு இந்தியா - இலங்கை இடையிலான முதல் உயர்நிலை சந்திப்பு இதுவாகும்.
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வருவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT