40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம்

40 ஆண்டுகளாக பிரியாணி பாபாவின் சேவை: ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம்

Published on

ஆந்திர மாநிலத்தில் “பிரியாணி பாபா’ என்பவர் 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை 1 கோடி ஏழைகளுக்கு தானமாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

இவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடை யிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.

பிரியாணி தயாரிக்க ‘பிரியாணி பாபா’வே களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். இவருக்கு பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவி புரிகின்றனர். தினந்தோறும் இந்த இரு பகுதிகளிலும் சுமார் 1,000 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும் விசேஷ நாட்களில் 8,000 முதல் 10,000 பக்தர்கள் வரை பிரியாணி வழங்கப்படுகிறது.

இது குறித்து ‘பிரியாணி பாபா’ கூறும்போது, “உணவு என்பது மிக அத்தியாவசியமானது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதின் மூலம் பல ஏழை மக்களின் பசியை போக்க முடிகிறது. கடந்த 40 ஆண்டு காலத்தில் சுமார் 1 கோடி பக்தர்களுக்கு பிரி யாணியை அன்னதானமாக வழங்கி யிருக்கிறோம். இது தொடர வேண் டும் என்பதே என் கோரிக்கை. நான் ஜாதி, மதங்களை நம்புவ தில்லை. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். என் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in