Published : 03 Jan 2015 11:50 AM
Last Updated : 03 Jan 2015 11:50 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மகளை கவுரவ கொலை செய்த தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ஆனந்த் மிஷ்ரா கூறியதாவது:
முசாபர்நகர் மாவட்டம் பரோடா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு சாதி இளைஞனை காதலித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய் துள்ளார். இதற்கு அவரது குடும் பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இதுதொடர் பாக அந்தப் பெண்ணுக்கும் குடும் பத்தினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணை தந்தையும் உறவினர்கள் சிலரும் சேர்ந்து கொலை செய்து புதைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததை யடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
ஹசன், சத்தார் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வரு கிறோம். இந்த சம்பவத்தையடுத்து பரோடா கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT