Published : 21 Jan 2015 02:33 PM
Last Updated : 21 Jan 2015 02:33 PM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டதற்கு கட்சிக்குள் இருவேறு கருத்து நிலவுவதாக வெளியான தகவலை ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், "பாஜகவில் உட்கட்சி பூசல் இல்லை. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்கிறோம்.
கட்சி நடவடிக்கையில் அதிருப்தி இருந்திருந்தால் உறுப்பினர்கள் நேரடியாக மேலிடத்திற்கு தெரிவித்திருப்பார்கள். கட்சிக்குள் பூசல் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் வீண் சர்ச்சையே" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT