Published : 09 Jan 2015 10:14 AM
Last Updated : 09 Jan 2015 10:14 AM

மைத்ரிபால சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிமுகம் கண்டுள்ள மைத்ரிபால சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் சிறிசேனாவுடன் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"நான் மைதிரிபால சிறிசேனாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடைபெறச் செய்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்டை நாடாகவும், நெருங்கிய நட்பின் காரணமாகவும் இலங்கையின் அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x