Published : 30 Jan 2015 11:59 AM
Last Updated : 30 Jan 2015 11:59 AM

காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்: ஜேட்லி

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் சான்றிதழ்கள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அருண் ஜேட்லி முந்தைய ஒப்புதல்களை வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x