Published : 07 Jan 2015 08:29 AM
Last Updated : 07 Jan 2015 08:29 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 150 புலனாய்வு மையங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் சோதனை முறையில் 150 புலனாய்வு மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “அதிநவீன சோதனைக் கருவிகள் கொண்ட இந்த மையங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு களில் ஆதாரங்களை சேகரிக் கும் பணியை செய்யும். முதல் கட்டமாக, பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடை பெறும் மாவட்டங்களில் இந்த மையம் அமைக்கப்படும். இவற் றின் செயல்பாடுகளை பொறுத்து, எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்படும்” என்றன.

இந்த புலனாய்வு மையங்கள் தொடர்பாக நாட்டின் அனைத்து முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான குற்றங் கள் அதிரித்து வருவதால், அது தொடர்பான சட்டஉதவி, பரிசோதனை வசதிகள், விசா ரணை நீதிமன்றங்கள் போன்ற வற்றை உறுதிப்படுத்த வேண் டியது அவசியம் என்று குறிபிட் டுள்ளார்.

இந்த புலனாய்வு மையங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 20 சதவீத மாவட்டங்களுக்கு பயன் தரும் வகையில் அமைக்கப்படும் எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x