Published : 13 Jan 2015 02:51 PM
Last Updated : 13 Jan 2015 02:51 PM
காஷ்மீர் பிரச்சினையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை தொடங்க வாய்ப்பே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் சர்தாஜ் அஜீஸ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சர்தாஜ் அஜீஸ் மேலும் கூறியதாவது:
"கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்தில் ஆலோசனை நடைபெறவிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியாவுக்கு துணை தூதர் அப்துல் பசீத் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசியதால், பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.
அதன்பின்னர் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா எப்போதுமே விருப்பம் காட்டவில்லை. இந்திய நிலைப்பாடு அப்படி இருக்கிறது.
ஆனால், காஷ்மீர் பிரச்சினையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை துவங்க வாய்ப்பே இல்லை என்பதே எங்களது நிலைப்பாடு. எல்லையிலும், இந்தியாவே அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT