

டெல்லியில் 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது.
வடகிழக்கு டெல்லியில், கவுதமபுரி பகுதியில் உள்ளது விபத்துக்குள்ளான கட்டடம். கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தது, சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. அதிகாலை முதலே தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணிகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அதிகாலை முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. நிறைய பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என்றார்.