

தொலைக்காட்சி சேனல்களின் `சீரியல்கள், ரியாலிட்டி ஷோ’க் களில் பங்கேற்கும் 12 வயதுக்கு குறைவான சிறார்கள் அநாகரிக மாக நடத்தப்படுவதால் அவர் களின் மனநலம் பாதிக்கப்படுவ தாக மத்திய அரசிடம் புகார்கள் குவிந்து வருகின்றன.
இதை தடுக்க இந்திய ஒளி பரப்பு மையப் பிரிவின் சார்பில் நாடு முழுவதும் செயல்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் அந்த மையத்தின் மூத்த அதி காரிகள் கூறியதாவது: தொலைக் காட்சி சேனல்களில் ஒளிபரப் பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படும் வகையில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பாக எங்களுக்கு வரும் புகார்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன. இதனை தடுக்க நாடு முழுவதும் செயல்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்டோர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங் கேற்பது தொடர்பாக கடந்த ஆண்டு விதிமுறைகள் வகுக்கப் பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால் இப் போது புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் மீது அதிகமான புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.