Published : 25 Jan 2015 09:46 AM
Last Updated : 25 Jan 2015 09:46 AM

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வங்கக் கடல் பகுதியிலேயே நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x