Last Updated : 20 Jan, 2015 12:07 PM

 

Published : 20 Jan 2015 12:07 PM
Last Updated : 20 Jan 2015 12:07 PM

சுனந்தா கொலை வழக்கு: தரூரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் - டெல்லி காவல்துறை ஆணையர் தகவல்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிடம் டெல்லி தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். தேவைப் பட்டால் தரூரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ். பாஸி தெரிவித்தார்.

சசி தரூரின் 3-வது மனைவி சுனந்தா புஷ்கர்(51). இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி இரவு, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி தனிப்படை போலீஸார் சசி தரூருக்கு சம்மன் அனுப்பினர்.

டெல்லி வசந்த விஹார் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் ஆஜரான சசி தரூரிடம், 5 அதிகாரிகள் கொண்ட குழு சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் பாஸி மேலும் கூறியதாவது: தரூர் விசார ணைக்கு ஒத்துழைப்புக் கொடுத் தார். அவரிடம் 3 அல்லது மூன்றரை மணி நேரத்துக்கும் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டது. அவரின் பதிலை ஆய்வு செய்தபின், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம். மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கில் ஐபிஎல் விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், அதுகுறித்தும் விசாரிப்போம். இதுவரை யாரையும் சந்தேகிக்க வில்லை. என்றார்.

இரவில் விசாரணை ஏன்?

இரவில் விசாரித்தது ஏன் எனக் கேட்டபோது பாஸி மேலும் கூறியதாவது: கேள்வி கேட்கும் நேரம் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. அவர் 7 மணிக்கு வந்தார். அவரிடம் கேள் விகள் கேட்பது பற்றி மாலைதான் முடிவெடுத்தோம்” என்றார்.

சுனந்தா சுயநினைவின்றிக் கிடந்ததைப் பார்த்ததும் காவல் துறைக்கோ, ஆம்புலன்ஸுக்கோ ஏன் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்பது உட்பட பல்வேறு கேள்விகள் தரூரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுனந்தா உடலில் இருந்த 15 காயங்கள், குறிப்பாக ஊசி போடப் பட்டதற்கான தழும்பு ஆகியவை குறித்து கேள்வி கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. சுனந்தாவுக்கு ஊசி அல்லது வாய் மூலம் கொடுக் கப்பட்ட விஷம் அவரின் இறப்புக்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனந்தா இறப்பதற்கு முன் உரையாடியதாகக் கூறப்படும் பெண் பத்திரிகையாளர், அவரின் மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த தரூரின் தனிச் செயலாளர் பிஎஸ் அபிநவ் குமார் ஆகியோரிடம் போலீஸார் விரைவில் விசாரணை நடத்துவர் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x