Published : 22 Jan 2015 01:28 PM
Last Updated : 22 Jan 2015 01:28 PM

பன்றிக் காய்ச்சல்: தெலங்கானா சுகாதார இயக்குநர் பணியிட மாற்றம்

தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவுவதையடுத்து அம்மாநில சுகாதார இயக்குநர் சாம்பசிவ ராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அபோது, சுகாதார துறை இயக்குநர் சாம்பசிவ ராவ் தடுப்பு, முன்னெச்சரிக்கைக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென்று கேட்டறிந்தார். மேலும் அவரது நடவடிக்கைகளில் திருப்தியடையாததால் அவரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

ஜோதி புத்த பிரசாத் என்பவருக்கு சுகாதார இயக்குநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x