

நாடு முழுவதும் உள்ள 2,500 நகரங்களில் 3 ஆண்டுகளில் அதிநவீன இலவச கம்பியில்லா (வை-பை) இணையதள வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) நிறுவனம் செயல்படுத்தும்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா டெல்லியில் நேற்று கூறியதாவது:
விமான நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பது போல, கொல்கத்தா, சென்னை, லக்னோ, டேராடூன், ஹைதராபாத், வாரணாசி, போபால், ஜெய்ப்பூர், பாட்னா, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிநவீன (4ஜி) இலவச கம்பியில்லா இணையதள வசதி அடுத்த நிதியாண்டு முதல் (2015-16) வழங்கப்படும்.
அனைத்து செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே இணையதள சேவையை இலவச மாக பயன்படுத்த முடியும். அதன் பிறகு தொடர்ந்து பயன்படுத்தி னால் கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும்.
பிஎஸ்என்எல் அல்லது எம்டிஎன்எல் இணைப்பு பெற்றவர் கள், இலவச பயன்பாடு முடிந்ததும் தொடர்ந்து இணையதளத்தை குறைந்த கட்டணத்தில் (ரோமிங்) பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் நாடு முழுவதும் உள்ள 2,500 நகரங் களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கும் இணையதள வசதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்ட இந்த திட்டம் உதவும் என்றும் கருதப்படுகிறது.